states

img

மேற்கு வங்க மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் “செங்கொடி”

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8 அன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஊழலற்ற பஞ்சாயத்து, 100 நாள் வேலை திட்டத்தில் சரியான நேரத்தில் ஊதியம், பொதுமக்களுக்காக பாடுபடும் “பஞ்சாயத்து” என்ற முழக்கங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் செங்கொடியுடன் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் செங்கொடி மிளிருகிறது.